இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்காமல் இருப்பதற்கு ஐந்து நாடுகள் தீர்மானம்?

0
134

இலங்கைக்கு மீண்டும் கடன் அல்லது உதவிகளை வழங்குவதில்லை என்று, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது நாட்டுக்கு வருகைதந்துள்ள இராஜதந்திரகள் குழு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான இரண்டு காரணங்களை அடிப்படையாக வைத்தே, சீனாவானது இலங்கைக்கு கடன் அல்லது நன்கொடைகளை வழங்குவதற்கு மறுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த விவகாரத்தை பிரதான பிரச்சினையாக குறிப்பிடப்பட்டுள்ள சீனா, சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உரக்கப்பல் விவகாரத்தை இரண்டாவது பிரச்சினையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சீனாவானது 16 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடனில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் அமுல்படுத்தப்படவில்லை எனவும் பெறப்பட்ட கடன்களே மீளச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கை இந்தியாவிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்க நேரிடும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.