ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை சந்தித்தார்.
காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்து, பொருளாதார சீர்திருத்தங்கள், சட்டவாட்சி, நல்லாட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.