இலங்கையில் கண்மூடித்தனமான கைதுகள் – ஐநாவின் மனித உரிமைகளிற்கான குழு கவலை

0
162

இலங்கையில் இடம்பெற்ற கண்மூடித்தனமான கைதுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

நிகாப் அணிந்த முஸ்லீம் பெண்கள் கைதுசெய்யப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து ஐநா குழு கவலை வெளியிட்டுள்ளது.

தனது சமீபத்தைய அமர்வின் பின்னர் இலங்கை உட்பட ஆறு நாடுகளின் நிலவரம் குறி;த்த அறிக்கையொன்றை ஐநா குழு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கண்மூடித்தனமான கைதுகள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழிற்சங்கவாதிகள் தமிழர்கள் முஸ்லீம்கள் கைதுசெய்யப்படுவது குறித்து ஐநா குழு கவலை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைகளிற்கு முன்னர் நீண்ட காலம் தடுத்துவைத்தல் சீரற்ற பிணைவிதிகள் மற்றும் காவலில் இல்லாத மாற்று வழிகளிற்கான பயனற்ற அணுகல் குறித்தும் ஐநா குழு ஆராய்ந்துள்ளது.

தன்னிச்சையாக தடுத்துவைத்தல் கைது குறித்து உரிய வலுவான விசாரணைகளை கோரியுள்ள ஐக்கிய நாடுகள் குழு அத்துடன் கைகதிகளிற்காக அடிப்படை சட்டப்பாதுகாப்பு  மதிக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.