இலங்கை ஆயர் பேரவையினர், திருத்தந்தை பிரான்சிசை சந்தித்தனர்

0
143

இலங்கை ஆயர் பேரவையினர், திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாகும்.

இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு – கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன் போது இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால விவகாரங்கள் குறித்து பாப்பரசருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுத்த பாப்பரசரின் ஆலோசனைகளையும் பெற்றார்.

இந்த திருப்பயணமானது அட் லிமினா விசிட்’ என திருச்சபையால் அழைக்கப்படுகிறது.