இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஓவியப் போட்டி

0
138

சமூக சகவாழ்வை முன்னெடுக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்டங்களின் ஒரு அம்சமாக, நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு,
சிறார்கள் இடையே ஓவியப் போட்டி நடாத்தப்படுகிறது.
நேற்று காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி பராமரிப்பு நிலையத்தில் ஓவியப் போட்டி இடம்பெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களைச்
சேர்ந்த சிறார்கள் கலந்து கொண்டனர்.
சகல சமூகங்களையும் சேர்ந்த சிறார்களால் கலையம்ச நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதோடு, சமாதானத்தினூடாக பொருளாதார மேம்பாடு, சமய நல்லிணக்கம், இன ஒற்றுமையில் சிறுவர் பங்களிப்பு எனும் தலைப்புகளில் ஓவியப் போட்டி இடம்பெற்றது.
நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் ரீ.லோகிதாஸ், மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் ஆர். மனோகரன் உட்பட பலரும்
கலந்துகொண்டனர்.