டிசெம்பர் மாதம் ஆரம்ப நாள்களில் லண்டன் நகரில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் அதிகமானவர்கள் புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வி.யு.ஐ-20212/01 என்ற பெயரால் அழைக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் முதன் முறையாக பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் பரவிய சார்ஸ் வைரம் மற்றும் தற்போது உள்ள கொரோனா வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது.
அது மாத்திரமின்று அதிக நபர்களுக்கு மிக இலகுவாக இந்த வைரஸ் பரவும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
பிரித்தானியாவின் நிலைமை போன்றே தென்னாபிரிக்காவில் இந்த வைரஸ் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நாட்டின் மாநிலங்கள் பலவற்றில் இப்போது பரவும் வி.யு.ஐ-20212/01 புதிய வைரஸ் மாறுபட்ட விதத்திலுள்ளது.
நோய் அறிகுறிகளும் மாறுபட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இந்தப் புதிய வைரஸ் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
எனவே முக்கியமாக இளைய தலைமுறை அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.