உடுவிலில் சட்டவிரோதமாக கசிப்பு விற்றவர் கைது!

0
329

இன்று யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை இடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உடுவில் மல்வம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட அதேஇடத்தை சேர்ந்த 55வயதுடையவரை யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 6லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்