உணவு தவிர்ப்பு போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக மாறியது!

0
202

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி – பூநகரி இலவங்குடா மக்கள் தமது போராட்டத்தை கவனயீர்ப்பு போராட்டமாக நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
இலவங்குடா பகுதியில் தமது பாரம்பரிய தொழில்கள் பாதிக்கப்படும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அட்டைப் பண்ணைகளை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மக்கள் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் சென்று அந்த மக்களோடு கலந்துரையாடி குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு, மாற்று வழிகளில் ஏதாவது போராட்டத்தை தொடருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குறித்த மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு, தொடர்ந்து கவன ஈர்ப்புபோராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து நேற்று மாலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.