உதுமான் முன்பள்ளி மீராவோடையில் சிறுவர், ஆசிரியர் தின நிகழ்வுகள்

0
228

உலக சிறுவர் தினத்திம் மற்றும் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உதுமான் முன்பள்ளி மீராவோடையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

உதுமான் முன்பள்ளி நிருவாகத் தலைவர் கே.எம்.நிஜாம்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌபர்,பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர்,சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர் திருமதி எஸ்.உருத்திரகாந்தன்,நூலகர்.கருத்திரன்,சமூக பற்றாளர் ஜ.எம்.றிஸ்வி ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.