நுவரெலியா புஸ்ஸலாவ தோட்டத்தில், நயப்பனை மேற்பிரிவில், சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிக நீண்ட காலமாக, நயப்பனை தோட்டத்தில், சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில், நேற்றுக் காலை, விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, சிறுத்தை உயிரிழந்துள்ளது.
தற்போது, வீடுகளுக்கு அருகில், சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுத்தை, வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.