இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் ,மீன்பிடிப்படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்தும் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்க முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ச்சியாக நேற்றைய தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு அபராதம் விதித்தும் அவர்களை கண்டுக்கொள்ளாத மத்திய அரசை எதிர்த்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தது வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன