உற்பத்தி திறன் அடிப்படையிலேயே பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியும் – ரொஷான் ராஜதுரை

0
48

உற்பத்தி திறன் அடிப்படையிலேயே பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
நானுஓயா ரதல்ல பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 150 ஆண்டுகள் பழமையான தேயிலை தொழிலில் உற்பத்தி திறன் அடிப்படையிலான முறைமை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிராக இல்லை.

எனினும் தொழிலாளர்கள் நாளாந்தம் 8 மணிநேரம் பணியாற்றி பெறும் வேதனத்தை விடவும் உற்பத்தி திறன் அடிப்படையில் வேதனத்தை வழங்குவதற்காக நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் தொழிலாளி ஒருவர் சில மணிநேரங்களில் அதிக தேயிலை கொழுந்தைப் பறித்து அதிக வேதனத்தை பெற முடியும்.

அந்த முன்மொழிவின் அடிப்படையிலேயே பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கருத்துரைத்துள்ளதாக கருதுகின்றோம். குறித்த முன்மொழிவை செயற்படுத்தாமல் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கிடைக்கும் விலையை விடவும் தோட்ட நிறுவனங்கள் தற்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 100 ரூபாய் அதிகமாக வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.