உலக நீர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நவாலியில் விழிப்புணர்வு நிகழ்வு

0
137

உலக நீர் தினத்தை முன்னிட்டு, கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தால், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தினர் மற்றும் நவாலி சென்பீற்றர்ஸ் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையினர் பயன்படுத்தும் நன்னீர் கிணறு மீள் புனரமைக்கப்பட்டு, அன்றாட நடவடிக்கைகளுக்காக தேவாலய மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக உலக தண்ணீர் தினம் தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் விருந்தினர்களால் விசேட உரைகள் ஆற்றபட்டன.

விழிப்புணர்வு நிகழ்வில் நீரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் பதாகைளையும் மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

நிகழ்வில் சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்கு தந்தை ஜே.பி.அன்ரனி அடிகளார், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் உதயகுமார் யசோதா, கரித்தாஸ் கியூடெக் இயக்குனர் அருட்பணி ச.இயூஜின் பிரான்சிஸ், நவாலி சென் பீற்றர்ஸ் றோ.க.த.க பாடசாலை அதிபர், மாணவர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.