உலர்ந்த மஞ்சளுடன் அறுவர் கைது

0
25

உடப்புவ, கருகப்பனே கடல் பகுதியிலும் கடலோரப் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட முயன்ற சுமார் 145 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடப்புவ கருகப்பனை மற்றும் கடலோரப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த படகில் மூன்று பைகளில் அடைக்கப்பட்டிருந்த 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்புடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.