உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல் அரச நிதி பற்றிய குழுவான கோப் குழுவில் இன்றைய தினமும் கலந்துரையாடப்படவுள்ளது
குறித்த கலந்துரையாடலின் போது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், அரச நிதி பற்றிய குழுவான கோப் குழுவின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.
அத்துடன், அரச நிதி பற்றிய குழுவான கோப் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ச டி சில்வா தலைமையில் நேற்று மாலை கூடிய இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.