உள்நாட்டு துப்பாக்கிகள் மூன்றுடன் மூவர் கைது

0
140

அனுராதபுரம், காலி ஆகிய பிரதேசங்களில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் திரப்பனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

35, 37 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காலி யாக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவதகெட்டிய பிரதேசத்தில், யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நவதகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.