உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழு இதுவரை செலவிட்டுள்ள தொகை!

0
190

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழு பெப்ரவரி மாத இறுதி வரை 13.1 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதில் 12.7 கோடி ரூபாவை நிதி அமைச்சு தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ளது.

அவை தொடர்ச்சியான செலவுகளுக்கு வழங்கப்படுகின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழு கோரிய மொத்தத்தொகை 932.6 கோடி ரூபாயாகும்.

எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத காரணத்தால் தற்போது உள்ளூராட்சி சபைகளின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.