உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்!

0
44

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். குறித்த பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் கலேவல பிரதேச சபை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கட்டுப்பணம் செலுத்தியதைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட குறித்த பெண், இலங்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்குடன் தான் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.