உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவு!

0
43

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் செயற்பாடுகள் கடந்த 3 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்தநிலையில், நேற்றைய தினம் மொத்தமாக 21 கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.