உள்ளூராட்சி மன்ற ரீதியில், பெண்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம்

0
101

சேர்ச் போகொமண்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில உள்ளூராட்சி மன்ற பெண்களின் வில் கிளப்
அமர்வானது இன்று கூடியது.
சேர்ச் போகொமண்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் கண்காணிப்புமற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஸ்ட முகாமையாளர் எம்.ஜ.எம்.சதாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் கமால் நேத்மினி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ்;,தேசிய அபாயகர ஒளடதங்கள் ஆணைக்குழுவின் வடக்கு கிழக்குமாகாண இணைப்பாளர் எ.ஆ.றசாட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஜி.பி.நௌசாட் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.
சேர்ச் போகொமண்ட் கிறவுண்ட் நிறுவனம் கடந்த 04 வருடங்களாக அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகசெயற்பாட்டாளர்களை
வலுப்படுத்தி இப்பெண்களுக்கான தனித்தளமாக ‘வில் கிளப்’ஒன்றினைஉருவாக்கியதுடன் இவர்களுக்கு உதவியாக பலதரப்பட்ட பங்குதாரர்கள் குழு ஒன்றினையும் அமைத்து
இயங்கிவருகின்றது.
இன்றையவில் கழக அமர்வில் உள்ளுராட்சி மன்ற பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்டமுன்மொழிவுகளின் செயற்பாடுகள் பற்றியும், இச்செயற்பாடுகளினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்; அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், திட்டசெயற்பாடுகளை செயற்படுத்தும் போது பல தரப்பட்ட பங்குதாரர் குழுவிடமிருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கும் பலதரப்பட்ட பங்குதாரர் குழுவினர்களுக்குமிடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது. வில் கிளப்பை
மாவட்டரீதியில் பதிவு செய்வதற்கு தேவையான வழிமுறைகள் பற்றி அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் கே.எம்.இர்பான் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினார்.
இதே நேரம்வில் கழகத்திற்கான புதிய நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.