ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதை பிற்போடுவதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளமையினால், வாக்கெடுப்பு இடம்பெறும் தினம் தொடர்பில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் எடுப்பதாக சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.