எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் பிணையில் விடுவிப்பு

0
227


குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று(16) கைதுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத் தலைவர் அர்ஜுன் ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.