பரிசோதனைக் கருவிகள் இல்லாததால் எச்.ஐ.வி தொற்றாளர்களை அடையாளம் காணும் பரிசோதனைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் சமூகத்தில் இவ்வாறான நோய்கள் பரவும் அபாயம் பாரியளவில் காணப்படுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.