28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்கட்சிதலைவர் சஜித் பிரேமதாச திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்கும்,திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினர் நேற்று விஜயம் மேற்கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான அமைப்பாளர்; வே.வினோகாந்தின் அழைப்பின் பேரில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையினை பார்வையிட்ட சஜித் பிரேமதாஸ 27லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்களை வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம்; வழங்கிவைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் ‘ஐக்கியமக்கள் சக்தியிலிருந்து ஓர் மூச்சு’திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில்; ‘சுவாசம்’ எனும் திட்டத்தின் 49 ஆவது கட்டமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில்; ஐக்கியமக்கள் சத்தியின் அமைப்பாளர்கள் மதகுருமார்கள் வைத்தியசாலைவைத்தியர் தாதியர் உத்தியோத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்;கலந்துகொண்டனர்….

எதிர்கட்சித் தலைவர் தற்போதை அரசாங்கத்தின் ஆட்சிமுறைகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

நாட்டின் ஜனாதிபதி;,பிரதமர்,அரசாங்கத்தை விடவும் அரசியலமைப்பு சக்திவாய்ந்தது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், ஜனநாயக ரீதியில் போராடும் மக்களுக்கு எதிராக அச்சுறுத்தல்,அடக்குமுறை மற்றும் மேலாண்மையை பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால் போராடும் மக்கள் முன்னனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles