எதிர்கட்சியை சேர்ந்த ஏழு பேர் அரசாங்கத்தில் இணைகின்றனர்?

0
234

ஐந்து முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்கட்சியை சேர்ந்த ஏழு பேர் அரசாங்கத்தில் இணைகின்றனர்
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதுடன் அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில் ஐந்துபேர் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் இவர்களில் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவாகளும் உள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனுராதபுரம் புத்தளத்தை சேர்ந்த நாடாளுமன் உறுப்பினர்கள் இருவரும் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.