எஸ். சிவகுருநாதன் எழுதிய வரலாறு கூறும் நற்பிட்டிமுனை நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை கல்முனை சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். இலங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மலர்மாலை அணிவித்து பண்ட் வாத்தியம்;, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரையுடன் ஆரம்பமான
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் வு.த. அதிசயராஜ், நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீP பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் தம்பிராஜா ரவிராஜ், கல்முனை சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் யோகேஸ்வரி இராமநாதன், மற்றும் ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி கே. துரைராஜசிங்கம், கிராமிய தொழில் துறைத் திணைக்கள மாவட்டப் பண்ணிப்பாளர் சரவனமுத்து நவனிதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து நூல் தொடர்பான மதிப்பிட்டு உரையினை திரு. சஞ்சீவி சிவகுமார் வழங்கியதுடன் நூலாசிரியர் திரு. எஸ். சிவகுருநாதன் அதிதிகளுக்கான நூல் பிரதிகளை வழங்கினார்
நிகழ்வின் சிறப்பு அதிதியாக சாமஸ்ரீ தேச மான்யா கண. வரதராஜன், னு. பெஞ்சமின் நற் பிட்டிமுனை ஆலய தலைவர்கள், அதன் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.