27 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் இன்று விவாதம்

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விவாதத்தை கோரியுள்ளார். இந்த விவாதம் நாளை வரை இடம்பெறவுள்ளது. அத்துடன், சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் அங்கீகாரத்தின் பின்னர் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles