ஏறாவூர்ப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமத்திலுள்ள 605 குடும்பங்களைச்சேர்ந்த 2420 பேருக்கான உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்திலுள்ள குடும்பங்களுக்கு பகிர்நதளிப்பதற்கென பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர்ப் பிரதேச தனவந்தர்கள் உலருணவுப்பொதிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தப்பட்ட ஏறாவூர்-02 என்ற கிராம சேவகர் பிரிவு பகுதியில் 84 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், 19 ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் 70 அரச ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர்.
இப்பொதிகள் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம சேவையாளர்கள் மூலமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதாக பிரதேச செயலக அனர்த்த நிவாணர உத்தியோகத்தர் எம்.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பிரசேத்தில் நானூறுக்கும் அதிகாமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இதுவரை எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.