கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலான சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏறாவூர் நகர சபையின் தவிசளர் எம்.எஸ்.நழீம் தலைமையில்
‘சுத்தமானதும் பசுமையானது மான ஏறாவூர் நகரை நோக்கி’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மாதாந்தம் இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி இன்று மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகளில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் காணப்பட்ட வடிகான்கள்,வெற்றுக்காணிகள்,நீரோடைகள்,வீதியோரங்கள் என பல்வேறு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன் உள்ளக வீதிகளில் இரு மருங்கிலும் பாதசாரிகளுக்கு இடையூறாக காணப்பட்டு வந்த பொருட்களும் அகற்றப்பட்டன.
இச்சிரமதானப்பணியில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எம்.அஸ்மி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.