ஐக்கிய தேசியக் கட்சியினால் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் பேச்சாளர்களை
உருவாக்கும் பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பு பொது நூலக மாநாட்டு மண்டபத்தில்
இடம் பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் செயற்பாட்டளார்களின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின்
அனுரசரணையுடன் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே கண்டாரவின் பிரதிநிதியாக குமுது ஹெட்டிகமகே செயலமர்வில் பங்கேற்றார்.
செயலமர்வை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தைச் சேர்ந்த கலாநிதி மஹிந்த பெரேரா நடாத்தினார்.