ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் கட்சி தலைமையகத்துக்கு அழைப்பு

0
145

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் கட்சி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்த யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.