ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவால், சாகல ரத்நாயக்க இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திசாநாயக்கவை நியமிப்பதற்கு, கட்சியின் செயற்குழு தீர்மானித்திருந்தது.
எனினும் அந்தப் பதவியை ஏற்பதற்கு நவீன் திசாநாயக்க மறுத்ததன் காரணமாக சுமார் ஒரு வருடமாக அந்தப் பதவிக்கு வெற்றிடம் நிலவியது.
இந்நிலையிலேயே அந்தப் பதவிக்கு முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு சாகல ரத்நாயக்கவை நியமிப்பதற்கான யோசனை கட்சியின் செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே அதற்கான அனுமதியை கட்சியின் செயற்குழு வழங்கியுள்ளது.
சாகல ரத்நாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக செயற்பட்டு வந்த நிலையில், அந்தப் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதவிக்கு சிறுபான்மையினத்தவர்கள் சார்பில் இருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.