நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 927 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 12 ஆயிரத்து 454 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது.