கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 20 போத்தல் கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 20 போத்தல் கசிப்பை உடைமையில் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்த தருமபுரம் பொலிஸார் குறித்த நபரை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.