மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு குழுவினர் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரப்புரம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தி செய்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு தயார் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 40 லீடர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தெரிவித்துள்ளார் .

நாட்டில் தொடர்ச்சியான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அனைத்து மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சட்டவிரோத மது பாண தயாரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.