அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றில்; மூன்றாவது மாடியில் இரு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் மலையடிகிராமம் – 4 இனை சேர்ந்த 33 வயதான செய்னுல் ஆப்தீன் இஸ்ஹாக் என்ற சந்தேக நபர் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் இணைத்து குறித்த இரு கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.