கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல பணிகள் நிறைவு

0
158

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் எற்றுவதற்கான பூர்வாங்க பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று இருப்பதாக கஞ்சிகுடியாறு மாவீர்ர பணிக்குழு ஏற்பாட்டாளர் கணேஷன் பிரபாகரன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்து இருந்தார்.

இவ் ஊடக சந்திப்பானது அம்பாரை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல முன்றலில் அம்பாரை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்று இருந்தன.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர் கணேஷன் பிரபாகரன்

அம்பாரை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரமாண்டமான முறையில் வழமைபோன்று எமது தாயக மண்ணுக்காக தமது இந் உயிரை நீத்த 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவாக பெற்றோர்களால் நாளை மாலை 06.5 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் செலுத்தப்படவுள்ளதுடன் மாவீரர்களின் நினைவாக பெற்யோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தென்னங்கன்றுகளும் வழக்கி வைக்கப்படவுள்ளன.

அந்நவகையில் நாளைய இடம்பெறவுள்ள மாவீரர் நிகழ்வுக்கான அனைத்து பூர்வாங்க வேலைகளும் நிறைவு பெற்று இருப்பதுடன் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்களுக்கான வாகன போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து மாவீரர்களின் உறவுகளையும் பொது மக்களையும் வருகைதந்த மாவீரர்களின் நினைவாக தீபச்சுடர் ஏற்றி தமது அஞ்சலிகளை செலுத்துமாறு கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள் பணிக்குழுவின் அழைப்பு விடுத்துள்ளனர்.