கடும் வரட்சி: வில்பத்துவில் விலங்குகள் பாதிப்பு

0
140

கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளது.

வில்பத்து தேசிய வனப் பூங்காவில் கிட்டத்தட்ட 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.

ஏறக்குறைய அனைத்துமே காய்ந்து போனதுடன், வில்பத்து தேசிய வனப் பூங்காவில் வசிக்கும் விலங்குகளும் குடிநீர் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.

இது தொடர்பில், வில்பத்து தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் சுரங்க ரத்நாயக்கவிடம் கேட்டபோது, ​​தேசிய வனப் பூங்காவில் சுமார் 106 சிறிய ஏரிகள் உள்ளதாகவும் அவற்றில் ஐம்பது வீதமானவை கடும் வரட்சி காரணமாக வறண்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.