கட்டுத்துவக்கு வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

0
195

பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேன்னேஹேன பொதுப்பிட்டிய பிரதேசத்தில், பதுளை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து கஞ்சா சேனையொன்றை சுற்றிவளைத்த போது, கட்டுத்துவக்கு வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுத்துவக்கு வைத்திருந்த கஹட்டரூப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்பவம் இடம்பெற்றள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.