கண்டி பன்விலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கம்மன பிரதேசத்தில் பைனஸ் மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் நேற்று (18) பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாரிய மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பில், பன்விலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.