கதிர்காம பாதயாத்திரை  செல்வோருக்கு ஓம்ரீவி நிறுவனத்தினரால் பொதி வழங்கி வைப்பு!

0
272

தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இன்று காலை கதிர்காம பாதயாத்திரை   ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்த அடியார்களுக்கு ஓம் தொலைக்காட்சிநிறுவனத்தினரால் உணவு பண்டங்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது,

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையை ஆரம்பித்தனர் 

கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயாவேல்சாமி தலைமையில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஓம் ரீவி நிறுவனத்தினரால்  உணவு பண்டங்கள் குடிநீர் போத்தல் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது,

டான் ,ஓம் தொலைக்காட்சி குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இளையதம்பி செல்வச்சந்திரன் அவர்களினால்  பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு பண்டங்கள் அடங்கிய பொதி  சந்நிதி ஆலய முன்றலில்  வழங்கி வைக்கப்பட்டது.