இலங்கையை பூர்வீகமாக கொண்ட துஷாரா வில்லியம்ஸ் என்ற பெண் கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் வில்லியம்ஸ் ஆவார்.
கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியில் கற்றார்.
இதன் பின்னர் 1991 இல் கனடாவிற்கு குடிபெயர்ந்தார்.
வில்லியம்ஸ் இலங்கையில் உள்ள கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.