கல்முனையில் அதிகரிக்கும் கொரோனா

0
354

அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் தினமும் நடைபெற்று வருகின்றன.

இதனடிப்படையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மியின் வழிகாட்டலில் மருதமுனை கடற்கரை பகுதியில் கடந்த இரு தினங்களாக எழுமாறாக 73 பேருக்கு மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கல்முனை பகுதியை கொரோனா பரவலிலிருந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை இனங்காண்பதற்காகவும் இந்த பரிசோதனைகள் இடம் பெறுவதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த மாதம் 28ஆம் திகதியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.