அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் உள்ள நீர்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள் இவ்வாறு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனை சாய்ந்தமருது பகுதி மீனவர்களுக்கு தேவையான ஐஸ்கட்டி தேவைகள் இவ்வாடி ஊடாகவே பூர்த்தி செய்யப்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.எனினும், குறித்த நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளதுடன் ஐஸ் உற்பத்தி நிலையமும் செயலிழந்து காணப்படுகின்றது.
இந்நிலையில் உடைந்து விழும் நீர்த்தாங்கியை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.பழுதடைந்த நீர்த்தாங்கி மற்றும் கட்டட இடிபாடுகள் சிதைவுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அருகில் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பலர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளமை முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.