கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன் குலோமிங் 2022ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று மாலை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்று, இடம் மாற்றம் பெற்றுச் சென்ற மற்றும் அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவு சின்னங்கலும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டக்லஸ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதலவர் சிரேஸ்ட சட்டத்தரணி ரக்கீப், அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.