கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி கடமைகள் பொறுப்பேற்பு

0
165

கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பக்கீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமய அனுஷ்டானங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் உட்பட பொலிஸ் அதிகாரிகள், மதப் பெரியார்கள்,சமூகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரியாக கடமையாற்றி வந்த சுஜித் பிரியந்த எல்பிட்டிய பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக இடமாற்றும் பெற்றுச் சென்றதையடுத்தே இவர் கல்முனைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நிலையிலேயே இவர் கல்முனைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.