கல்முனை வாடி வீட்டு கடற்கரை வீதி புனரமைப்பு

0
203

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவி திட்டத்தினூடக கல்முனை வாடி வீட்டு கடற்கரை வீதி 57.12 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதியாக செப்பனிடப்படுகின்றது.

கல்முனை பொதுச் சந்தை மற்றும் நகரின் முக்கிய அலுவலகங்கள் செல்வதற்காக நாளாந்தம் அதிகளவான பொது மக்கள் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் நாட்டில் கொரோனா தொற்று நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையிலும் பொது மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் வீதி அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.