கல்முனை விசேட அதிரடிப்படையினரால்
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0
318

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று மாலை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று -கல்முனை பிரதான வீதி செயின் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர், விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதிகாகியுள்ளார்.கைதான நபர் நிந்தவூர் 09ஆம் பிரிவின் பகுதியை சேரந்த 18வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம்இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 04 கிராம் 200 மில்லிகிராம், சந்தேக நபர் செலுத்தி வந்த ஹொன்டா ரக மோட்டார் சைக்கிள் ,ஒரு தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான குழவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியுள்ளனர்.