களுவாஞ்சிகுடியில் எழுமாறாக 59 பேருக்கு கொரோனா பரிசோதனை

0
243

களுவாஞ்சிக்குடி சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுதவாளை ஆகிய கிராமங்களில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள், சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என 59 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று மேற்கொள்ளபட்ட பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றிசுகாதாரப்பிரிவினர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் பிராந்தியத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தமுடியும் என சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

களுவாஞ்சி;குடி சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.