களுவாஞ்சிகுடியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

0
344

மட்டக்களப்ப களுவாஞ்சிகுடி சுகாதாரப்பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டு அவர்களை மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டைக்கல்லாறு கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக பெரியகல்லாறு, காத்தான்குடி, கரடியனாறு ஆகிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்ட்டனர்.

களுவாஞ்சிகுடி சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் 13 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் 13பேரும், நேற்று நால்வரும் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டன.

தற்போது தொற்றுக்குள்ளாகின்ற நபர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்க்கு இரண்டு, மூன்று நாட்கள் காலதாமதம் ஏற்படுவதாகவும் இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாவதாகவும் தொற்றாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.